Sunday, February 13, 2011

காதலர் தின வாழ்த்துகள்


உலகெங்கிலும் சாதி, இன, மொழி, வேறுபாடற்று எல்லோரும் கொண்டாடும் சர்வதேச நாளான காதலர் தினத்தில் நீங்கள் காதலிப்பவர்களுக்கெல்லாம் (காதல் என்றாலே அன்புதானே) வாழ்த்து அட்டை அனுப்பி கொட்டுங்கள் உங்கள் காதலை.

எங்கேயும் சென்று தேட வேண்டாம். இங்கே உங்கள் தமிழ்.வெப்துனியாவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து அட்டைகளை நீங்கள் நேசிப்பவர்களுக்கு அனுப்பி அசத்துங்கள். 

பெற்றெடுத்த பிள்ளைகள் மீது,
அன்னை அவளுக்கு காதல்!
வற்றிடாத அருளைக் கொண்ட இறைவன் மீது,
என்றுமே பக்தனுக்கு காதல்!
சுற்றம் மறந்து போராடும் போராளிக்கு,
விடுதலைக்காக ஏங்கும் மண் மீது காதல்!
கற்றுத் தெளிந்த தமிழ் புலவனுக்கு,
தேனாக இனிக்கும் தமிழ் மீது காதல்!
தத்தித் தவழும் மழலைக்கு,
வண்ணங்கள் பலவான பொம்மைகள் மீது காதல்!
சுற்றித் திரியும் விடலைகளுக்கு,
அழகு மிகு பெண்கள் மீது காதல்!
துன்பம் வந்த வேளையிலே,
துவண்டிடாது கைகொடுக்கும் நண்பன் மீது காதல்!
தாலி தந்த நாள் முதலாய்,
அன்பு மிகு மனைவி மீது,காமம் கடந்த பின்பும்
சாகும் வரையும் காதல்!
பூமியிலே எத்தனையோ காதலாம் காதல்,
காதல் கொண்டவர்க்கு அழிவுண்டாம்!
என்று சொன்வர் பலர்
என்றுமே அழிவில்லையாம் காதலுக்கு!
காதல் காதல் காதல்,
காதல் போயின் சாதல்!
காதலர் தினம் கொண்டாடி,
உண்மைக் காதலை வாழவைப்போம்!

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com