Tuesday, February 15, 2011

காதலர் தினத்திற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?


மகாராஷ்டிர மாநிலத்தில், வருடம்தோறும் காதலர் தினத்தை எதிர்த்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபடும் சிவசேனா இன்றைய தினம் அத்தகைய போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதி காத்தது அந்த மாநில அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் சிவசேனாவின் இளைஞர் பிரிவுக்கு பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா பொறுப்பு ஏற்றுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில்தான் இம்முறை போராட்டம் வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டும், தங்கள் கட்சிக்கு இளைஞர்களின் வாக்குகளை சிதறாமல் தடுக்கும் நோக்கத்திலும்தான் இந்த வருடம் சிவசேனா போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com