Sunday, February 20, 2011

கௌதம் மேனன்:ரஜினி-கமலை இயக்க ஆசை! –


ஒரே படத்தில் ரஜினி – கமல் இருவரையும் வைத்து இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் இயக்குநர் கௌதம் மேனன்.தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன், தனது அடுத்த படமான நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பர வேலைகளில் மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்த படத்தில் வீரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நாயகியாக சமீரா ரெட்டி நடித்துள்ளார்.
படத்தைப் பற்றி கௌதம் வாசுதேவ் மேனன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “கடந்த வருடம் நான் ஒரு டாக்டரை சந்தித்து பேசும்போது, அவரிடம் சிகிச்சை பெறுகிற ஒரு விசித்திரமான மனநோயாளி பற்றி கூறினார். அப்போதுதான் நடுநிசி நாய்கள் படத்தின் கரு உருவானது.
அந்த மனநோயாளியாக யாரை நடிக்க வைப்பது? என்று யோசித்தபோது, என் உதவியாளர் வீரா கண்ணில் பட்டான். அவனிடம் எப்போதுமே ஒரு தேடல் இருக்கும். அந்த தேடல்தான் அவனை கதை நாயகனாக தேர்வு செய்ய வைத்தது.
படத்தை முடித்து முதல் பிரதி தயாரானதும், படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். அதற்காக வெவ்வேறு துறைகளை சேர்ந்த 35 பேர்களை தேர்வு செய்து படம் பார்க்க வைத்தோம்.
படம் முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, வீராவைப் பார்க்க பயந்தார்கள். அது எனக்கு கிடைத்த வெற்றி!27

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com