Friday, February 18, 2011

மாணவர்களுக்காக ஜெகன்மோகன் இன்று உண்ணாவிரதம்: அடுத்த அதிரடி

 ஆந்திராவில் மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை நிதி திட்டத்தில் ஆந்திர அரசு உரிய நிதி ஓதுக்க கோரிக்கை விடுத்து ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் ஒரு வார காலம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஆந்திர மாநில முன்னாள் மு‌‌தல்வர் ராஜசேகரரெட்டியின் மகனும், மாஜி காங்கிரஸ் எம்.பியுமான ஜெகன்ம‌ோகன்ரெட்டி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் மாணவர்களுக்குகல்வி உதவித்‌தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உரிய நிதி ஒதுக்க கோரி இன்று ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் ஒரு வாரம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஜெகனுடன் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com