Sunday, February 20, 2011

சார்லி சாப்ளின் பேரனுக்கு கர்நாடகாவில் திருமணம்


கர்வார்: சார்லி சாப்ளினின் பேரன் மார்க் சாப்ளின் கர்நாடக மாநிலத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். உலகம் முழுவதும் தனது குள்ள உயரம் மற்றும் ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரிக்கவைத்த நடிகர் சார்லி சாப்ளின். இவரது பேரன் மாரக் சாப்ளின் (60).இவர் அமெரிக் காவில் வசித்து வருகிறார். இருப்பினும் கடந்த 40 ஆண்டுகாலமாக கர்நாடக மாநிலம் கோகர்னா பகுதிக்கு வருகை தந்து இந்து மதம் குறித்து ஆராய்ந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 20 வருடங்களாக இந்து மதத்தில் பிடிப்பு ஏற்பட்டு சுவாமி ராம்தாஸ், சுவாமி சச்சிதானந்தம் ஆகியோரின் உரைகள்கொண்ட சிடிகளை கேட்க துவங்கினார். அது மட்டுமல்லாமல் இந்திய இசையையும் கற்க துவங்கினார். அதன்பலனாக தபேலா, மிருதங்கம் வாசிப்பதில் தேர்ந்த கலைஞரானார். அவர் அமெரிக்காவில் வசிக்கும் டேரா டிபானி (52) என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். திருமணத்தை இந்து முறைப்படி செய்ய இருவரும் முடிவு செய்து இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் கர்நாடகமாநிலம் கோகர்னாவில் உள்ள கோவில் ஒன்றில் இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டனர். டேரா டிபானிக்கு ஆர்மோனியம் வாசிப்பது மட்டுமல்லாமல் தசாரா பாடல்கள், கிருஷ்ணபஜன்ஸ் போன்றவை பிடித்தமான ஒன்று என கூறியுள்ளார். மேலும் மார்க் சாப்ளினுக்கு கன்னடம், இந்தி, தமிழ், பெங்காலி போன்றவை சரளமாக பேசுவதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com