Friday, February 25, 2011

கோத்ரா ரயி்ல் எரிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு

ஆமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 31 பேரின் தண்டனை குறித்த விபரங்களை சிறப்புகோர்ட் இன்று அறிவிக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு சபர்மிதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா ரயில்நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.இதைத்தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22--ம் தேதி இந்த வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான தண்டனை இன்று வெளியாகவுள்ளது.

ராஜஸ்தானில் கலப்பட மருந்தால் 12 கர்ப்பிணிகள் பலி

ஜோத்பூர்: ராஜஸ்தானில் ‌‌ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 கர்ப்பிணி பெண்கள் திடீர் உடலநலக்குறைவால் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. பொதுமக்கள் சாலைமறியல் , ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜஸ்தானில் உள்ள ‌ஜோத்பூரில் ஒமியாத் அரசுமருத்துவமனை உள்ளது.இங்குள்ள மகப்பேறு பிரிவில் தினமு்ம் ஏராளமான கரப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் 12 கர்‌ப்பிணி பெண்கள் திடீர் உடலநலக்குறைவால் இறந்துள்ளனர்.

கடைசி பயணத்தை தொடங்கியது டிஸ்கரி விண்கலம்

வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது. அமெரிக்க விண்வெளி நிலையமாகன நாசா , தனது டிஸ்கவரி எனும் விண்கலத்தினை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை 38 முறை அனுப்பி பல்வேறுநாட்டு விண்வெளி வீரர்களை தாங்கி அனுப்பி வைத்தது. தற்போது கடைசியாக நேற்று 6 விண்வெளிவீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து மாலை 4.50 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீறிப்பாய்ந்தது.

Wednesday, February 23, 2011

ஜிங்கூவா செய்தி நிறுவனத்தின் புதிய தேடுதல் வலைதளம்

மும்பை: சீன ‌மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து , அந்நாட்டு முன்னணி செய்தி இணையதளமான ஜிங்கூவா புதிய தேடுதல் இணையதளத்தினை நேற்று துவங்கியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற செய்தி இணையதளமான ஜிங்கூவா, அந்நாட்டின் மிகவும் பிரபலமான மொபைல் நிறுவனத்ததுடன் இணைந்து தேடுதல் இணையதளத்தினை துவக்கியுள்ளது. தற்போதுஉலகளவில் மிகவும் பிரபரலமான தேடுதல் இணையதளமாக கூகுள் உள்ளது. இவற்றிற்கு போட்டியாக இந்த தேடுதல் இணைய‌தளத்தில் புகைப்படங்கள், வீடியோ படங்கள், ஆடியோ,

இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரிப்பு


டில்லி: தேங்காய் ஏற்றுமதிக்கு இலங்கைஅரசு தடை விதித்துள்ளதால், மத்தியகிழக்கு நாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தேங்காய் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டு்ள்ள செய்தியில், மத்திய ‌வேளாண்த்துறை அமைச்சகம் ஒருங்கிணைந்த தேங்காய் சாகுடிமேம்பாட்டு மையத்தினை துவக்கியுள்ளது. இதன் மூலம் தேங்காய் உற்பத்தியில் தீவிரம் காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்து வந்த இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

லிபியாவுடனான அனைத்து தொடர்புகளையும்துண்டித்தது பெரு

லிமா: ஆப்ரிக்காகண்டத்தை சேர்ந்த லிபியா நாட்டில் நடைபெறும் கலவரத்தை அடுத்து அந்நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக பெரு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் அதிபர் ஆலன் கார்சியா விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: லிபியா நாட்டின் அதிபர் கடாபி நாட்டின் தலைவராக இருந்து வழி நடத்தும் தகுதியை இழந்துவிட்டார். அவர் பதவிக்காக மக்களின் மீது ராணுவத்தை ஏவி அவர்களை அடக்க நினைக்கிறார்.

2ஜி' விவகாரத்தில் நடவடிக்கை விவரம்: கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் "2ஜி' முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறதா' என, சி.பி.ஐ.,யிடம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ., சார்பில் நேற்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Tuesday, February 22, 2011

காலிபிளவர் சூப்

தேவையான பொருட்கள்
காலி பிளவர் 1 கப்,
காலி பிளவர் தண்டு 1 கப்,
பால் 3 கப்,
நெய் 3 தேக்கரண்டி,
மைதா 2 தேக்கரண்டி,
எண்ணை 1 தேக்கரண்டி,
உப்பு தேக்கரண்டி,
வெங்காயம் 1,
மிளகு தேக்கரண்டி,
பூண்டு 6 பல்.

செய்முறை
காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும்.

செட்டிநாட்டு வத்த குழம்பு..


சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூன்
வெங்காயம் - 3
பூண்டு- 10 பல்
தக்காளி - 1
சாம்பார் பொடி(கொத்துமல்லி+ மஞ்சள் தூள் + மிளாகாய்தூள் கலவை) - 3 ஸ்பூன்
புளி எலுமிச்சை உருண்டை அளவு
உப்பு- தேவையான அளவு

தாளிப்பதற்கு

எண்ணைய் - 5 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு..

செய்முறை..

வெங்காயம் தக்காளி பூண்டு மூன்றையும் நறுக்கி கொண்டு .. புளியை உப்பு நீரில் ஊறவைக்கவும்..அடுப்பில் வாணலைவைத்து 5 ஸ்பூன் எண்ணைய்விட்டு மேற்சொன்ன தாளிக்கும் பொருட்களை கடுகு பொறிந்ததற்கு பின் இட்டு...

கோழிச் சாம்பார்!


எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.
இனி செய்யத் தேவையான பொருட்கள்;

நண்டுக்கறி

தேவையான பொருட்கள்

சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம்
வெட்டிய வெங்காயம் - 100 கிராம்
வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம்
கருவேப்பிலை - தேவையான அளவு
சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு
வெந்தயம் - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - தேவையான அளவு
பழப்புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

Monday, February 21, 2011

வி.ஏ.ஓ., தேர்வில்11 ஆயிரம் "ஆப்சென்ட்'

மதுரை:மதுரை மாவட்டத்தில் நடந்த வி.ஏ.ஓ., தேர்வில் 11 ஆயிரம் பேர் "ஆப்சென்ட்' ஆகினர்.கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) பணிநியமனத்திற்கான தேர்வு நேற்று நடந்தது. மதுரையில் ஓ.சி.பி.எம்., பள்ளி, மதுரை கல்லூரி பள்ளி, சேதுபதி பள்ளி, சவுராஷ்டிரா பள்ளி, மீனாட்சி கல்லூரி உட்பட 132 மையங்கள் உட்பட மாவட்ட அளவில் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூரிலும் 187 மையங்களில் தேர்வு நடந்தது. மதுரையில் நடந்த இத்தேர்வில் மட்டும் பங்கேற்க 57 ஆயிரத்து 580 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்களில் 46 ஆயிரத்து 624 பேர்தான் நேற்று தேர்வு எழுத வந்திருந்தனர். 10 ஆயிரத்து 956 பேர் "ஆப்சென்ட்' ஆகியிருந்தனர். விண்ணப்பித்தோரில் 81 சதவீதம் பேரே தேர்வில் பங்கேற்றனர்.

வங்கி மேலாளர் மாயம்: மனைவி போலீசில் புகார்

நாமக்கல்: பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மாயமானது குறித்து அவரது மனைவி, நாமக்கல் போலீசில் புகார் செய்துள்ளார். நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (53). அவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 17ம் தேதி வங்கிக்கு சென்ற தங்கராஜ் மாலை வீடு திரும்பியுள்ளார்.அன்று இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை.

Sunday, February 20, 2011

சார்லி சாப்ளின் பேரனுக்கு கர்நாடகாவில் திருமணம்


கர்வார்: சார்லி சாப்ளினின் பேரன் மார்க் சாப்ளின் கர்நாடக மாநிலத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். உலகம் முழுவதும் தனது குள்ள உயரம் மற்றும் ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரிக்கவைத்த நடிகர் சார்லி சாப்ளின். இவரது பேரன் மாரக் சாப்ளின் (60).இவர் அமெரிக் காவில் வசித்து வருகிறார். இருப்பினும் கடந்த 40 ஆண்டுகாலமாக கர்நாடக மாநிலம் கோகர்னா பகுதிக்கு வருகை தந்து இந்து மதம் குறித்து ஆராய்ந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 20 வருடங்களாக இந்து மதத்தில் பிடிப்பு ஏற்பட்டு சுவாமி ராம்தாஸ், சுவாமி சச்சிதானந்தம் ஆகியோரின் உரைகள்கொண்ட சிடிகளை கேட்க துவங்கினார்.

கௌதம் மேனன்:ரஜினி-கமலை இயக்க ஆசை! –


ஒரே படத்தில் ரஜினி – கமல் இருவரையும் வைத்து இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் இயக்குநர் கௌதம் மேனன்.தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன், தனது அடுத்த படமான நடுநிசி நாய்கள் படத்தின் விளம்பர வேலைகளில் மிகத் தீவிரமாக உள்ளார்.
இந்த படத்தில் வீரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நாயகியாக சமீரா ரெட்டி நடித்துள்ளார்.

Saturday, February 19, 2011

குலோப் ஜாமூன் ...

தேவையான பொருட்கள்:-

மில்க் பவுடர்- 2 கப்

மைதா -1/2கப்

பால்-1/4கப்

பட்டர்- 3 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்

எண்ணெய்- பொரிப்பதற்க்கு தேவையான அளவு



ஜீரா தயாரிக்க;-


சீனி-3கப்

தண்ணீர்-3கப்

ரோஸ் எஸ்ஸன்ஸ்-2 ட்ராப்ஸ்

1.முதலில் ஒரு அகலமான சட்டியில் சீனியை போட்டு தண்ணீரை ஊற்றி ஜீரா தாயரிக்கவும்.அதில் ரோஸ் எஸ்ஸன்ஸ் விட்டு கலந்து வைக்கவும்.

வடை கறி

தேவையானவை:

கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:


கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.

கொடி பிடிக்கிறார் கிருஷ்ணசாமி : "2 போதாது....!! 9 தொகுதிகள் வேண்டும் ....!!"


வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி,   தொகுது பங்கீட்டில் அதிமுக அணியில் புதிய தமிழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  சென்னையில் நடந்த புதிய தமிழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூடுதல் இடம் கேட்டு கோரிக்கை எழுந்துள்ளது.
’’9 தொகுதிகளில் போட்டியிட்டால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறலாம்.    எனவே 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்’’ என்று  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கோரிக்கை

கொத்தமல்லிச் சட்னி

தேவையான பொருள்கள்:


கொத்தமல்லி – ஒரு கட்டு
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க - எண்ணை, கடுகு,

செய்முறை:


* கொத்தமல்லியை ஆய்ந்து, நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ளவும்.
* காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

சேமியா கிச்சடி


தேவையானப் பொருட்கள்:

4 பேருக்கு


சேமியா : 350 கிராம்
ம.தூள் : ஒரு சிட்டிகை
வெங்காயம் : ஒன்று
ப.மிளகாய் : 2
தக்காளி : 2
எண்ணெய் : தே.அளவு
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு : தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கறிவேப்பிலை, தக்காளி வெங்காயம், ப.மிளகாயை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். ஐந்து டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

மற்றொரு அடுப்பில் கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனவுடன் தக்காளி சேர்த்துக் கிண்டவும்.

சிறிது வெந்தவுடன் சேமியாவைப் போட்டு கிண்டவும். தீயை சிம்மில் வைத்துக் கிண்டவும். ம.தூள் சேர்க்கவும். எண்ணெய், காயோடு சேர்ந்து சேமியா சிறிது சூடு வந்து வெந்ததும் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரைச் சிறிது சிறிதாக இத்துடன் சேர்த்துக் கிண்டவும்.

தேவையான உப்பு சேர்த்துக் கிண்டி 90% தண்ணீர் இஞ்சியதும் அடுப்பை அணைத்து கிச்சடியை மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்துத் திறந்தால் 100% வெந்திருக்கும்.

தேங்காய்ச் சட்னியுடனோ, கொத்தமல்லிச் சட்னியுடனோ பரிமாறலாம்.

கலைஞர் உரை :"எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்"

இன்று (19.2.2011) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து  காணொலிக் காட்சி வாயிலாக  நடைபெற்ற மதுரை,  திருநெல்வேலி எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்கள்  மற்றும் சென்னை மாநில தரவு மையம் ஆகியவற்றை  தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் உரையாற்றினார்.     அப்போது அவர்,       ‘’தமிழகத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம், முதல்நிலை நகரங்களில் மட்டும் நிறுவப்பட்டுச் செயல்பட்டு வரும் தகவல் தொழில் நுட்பவியல் பூங்காக்களை  இரண்டாம்நிலை நகரங்களிலும் அமைத்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது.

அதன்படி,  இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில்  ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்பவியல் வளாகங்கள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்காக, அந்நகரங்களில் பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களுக்கு மைய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டல அங்கீகாரமும் பெறப்பட்டு உள்ளது.
இந்தத் தகவல் தொழில் நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த பொது உள் கட்டமைப்பு வசதிகளான உட்புற சிமிண்ட் சாலைகள், தரவு வடகம்பி, மின்வட கம்பி மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை, தெருவிளக்குகள், சுற்றுப்புறச் சுவர், மதகு பாலங்கள், சுங்க அலுவலகக் கட்டடம், நிர்வாகக் கட்டடம் போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் இரண்டு தகவல் தொழில் நுட்பவியல் பூங்காக்களை அமைத்திட தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி, இலந்தைகுளம் கிராமத்தில் 28.91 ஏக்கர் நிலப்பரப்பையும்,  வடபழஞ்சி கிராமத்தில் 245.17 ஏக்கர் நிலப்பரப்பையும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு வழங்கியது.

இப்பூங்காக்களுக்கு 26.4.2008 அன்று   அடிக்கற்கள் நாட்டப்பட்டு; இன்று (19.2.2011) திறந்து வைக்கப்படுகின்றன.


  இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 32 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதில், 18 கோடி ரூபாய்ச் செலவில்  50 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்; 7 கோடியே 44  இலட்சம் ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.


இலந்தைக்குளம் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் இரண்டு தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
15 கோடி ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மூன்று தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த நிறுவனங்கள் அமைய உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அடுத்த 5 ஆண்டு காலத்தில் இப்பூங்காக்களின்மூலம் 1400 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளும், 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஒரு இலட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் கிராமத்தில் 500 ஏக்கரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இதில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதலீடு 50 கோடி ரூபாயாகும். இப்பூங்காவில் மூன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பூங்காவில் முதற்கட்டமாக 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பொது உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், எல்காட் நிறுவனம் 50 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவிற்கான கட்டடம் கட்டியுள்ளது.

இப்பூங்காவிற்கு அடுத்த 5 ஆண்டு காலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும்,  40 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 80 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கி வைக்கப்படும் மூன்றாவது திட்டம் தேசிய மின் ஆளுமை வடிவமைப்பின் தூண்களில் முக்கியமான ஒன்றான மாநில தரவு மையம் ஆகும். 

இந்த மாநிலத் தரவு மையம் சென்னை இராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டுவரும் எல்காட் நிறுவனத்தின் தமிழக பெரும்பரப்பு வலை அமைப்புச் செயலாக்க மையம் அமைந்துள்ள அதே கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இது, ஏறத்தாழ 4500 சதுரடி பரப்பளவில் 35 வழங்கிகளும், 5 வலையமைப்பு அடுக்குகளும் கொண்ட வரையறுக்கப்பட்ட மிகப் பெரிய தரவு மையமாக அமைக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த மின் சேவைகளை அரசிடமிருந்து அரசுக்கும், அரசிடமிருந்து மக்களுக்கும், அரசிடமிருந்து வணிகத்திற்கும் அளிக்கும் வகையில் இத்தரவு மையம் செயல் படுத்தப்படும்.
தமிழகத்தின் பெரும்பரப்பு வலையமைப்பின் வாயிலாக அரசு மற்றும் அதன் முகவர்களும், மக்கள் பொது சேவை மையத்தில் இணையம் வாயிலாகப் பொதுமக்களும் இத்தரவு மையச் சேவைகளைப் பெற இயலும் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அதன் பங்களிப்பாக 55 கோடியே 80 இலட்சம் ரூபாயையும்;  தமிழக அரசு தனது பங்களிப்பாக 5 கோடியே 16 இலட்சம் ரூபாயையும் அளித்துள்ளன.

 இத்தரவு மையத்தை அமைத்ததன் மூலம் இந்தியாவிலேயே இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்தார்
.

எள்ளுப்பா செய் முறை


எள்ளுப்பா செய் முறை
1)இரண்டு கப் வெள்ளை எள்ளு
2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து
3)ஒரு கப் சீனி
எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும்
உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும்
பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்)
அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம்.

வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.

Friday, February 18, 2011

14 நாள் சி.பி.ஐ., விசாரணை முடிந்து சிறையில் ராஜா: வீட்டு சாப்பாட்டிற்கு கோர்ட் அனுமதி


தொடர்ந்து 14 நாட்களாக சி.பி.ஐ., காவலில் விசாரிக்கப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாப்பாடு சாப்பிடவும் அனுமதி வழங்கினார்.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல்விவகாரத்தில், சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜா, தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தார். கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் முதலில் ஐந்து நாட்களுக்கு காவலில் எடுத்தனர். அதன் பின், மேலும் நான்கு நாட்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக இரண்டு நாட்களும், நான்காவது முறையாக மூன்று நாட்களும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் 14 நாட்களாக அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். சி.பி.ஐ., காவல்முடிவடைந்ததை அடுத்து, நேற்று ராஜாவை பாட்டியாலா கோர்ட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் கொண்டு வந்தனர். மதியம் 2 மணியளவில், நீதிபதி சைனி முன் ராஜா ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சி.பி.ஐ., வக்கீல் அகிலேஷ் வாதிட்டதாவது: "ஸ்பெக்ட்ரம்' ஊழல்தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜாவையும், பல்வாவையும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இவர்களை சி.பி.ஐ., காவலில் எடுக்க காரணம், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து இரண்டு பேரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து, உண்மைகளை தெரிந்து கொள்ளவே. ஆனால், இவ்விஷயத்தில், பண பரிவர்த்தனைகள் நடந்தது உட்பட முறைகேடுகள் குறித்த எந்த கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்க மறுக்கின்றனர். மிகவும் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கருதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இவர்களை சி.பி.ஐ., கண்காணித்து வருகிறது.

ராஜாவை வெளியில் விட்டால், அவர் ஆதாரங்களை அழிப்பதோடு, வழக்கு விசாரணைக்கும் இடையூறு ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அது தவிர, ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தும் விசாரணையும் இன்னும் முடியவில்லை; எனவே, இவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்க வேண்டும், என வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி சைனி, முன்னாள் அமைச்சர் ராஜாவை வரும் 3ம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில்வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜாவை திகார் சிறைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. அப்போது, ராஜா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜாவுக்கு, "அல்சர்' நோய் இருப்பதால், வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் சாப்பாடு சாப்பிடவும், ஏற்கனவே வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ளவும் சிறையில் அனுமதிக்க வேண்டும்.மேலும், புத்தகங்களை படிப்பதற்கு மூக்கு கண்ணாடியையும் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என, கோரப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி சைனி, "1894ம் ஆண்டுக்கான சிறைச் சட்டம் பிரிவு 31ன் கீழான விதிகள்படி, ராஜாவுக்கு சிறையில் வசதிகள் செய்து தருவது குறித்து, சிறை கண்காணிப்பாளரை அணுக வேண்டும். சிறை விதிமுறைகளின்படி, அவர் ராஜாவின் மனுவை பரிசீலிப்பார்' என, உத்தரவிட்டார். பின்னர், ராஜா தரப்பில் ஒவ்வொருமுறையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதை தவிர்க்கும் வகையில் சிறையில் இருந்த படியே, "டெலிகான்பரன்சிங்' மூலம் தேவைப்பட்டால் விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு, நீதிபதி சைனி கூறுகையில், சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை யெனில், இதுகுறித்து கோர்ட்டிற்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார். ராஜா தரப்பில், நேற்று ஜாமீன் வழங்கும்படி கோரிக்கை வைப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாததால், டில்லி அருகே உள்ள திகார் சிறையில் நேற்று மாலை ராஜா அடைக்கப்பட்டார்.
ஆயுள் கைதி அறையில் ராஜா: திகார் சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அங்கு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், டில்லி மாநில முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் எஸ்.எஸ்.ரத்தி அடைக்கப்பட்டுள்ள அறையில் அடைக்கப்பட்டார். மாலை 6 மணி அளவில் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜா, அங்கு ஜெயில் எண்.1க்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் தனது அறையில் நுழைந்தது முதல், ராஜா யாரிடமும் பேசவில்லை. உள்ளே சென்றது முதல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். ராஜா அடைக்கப்பட்ட அறையில்தான், ஆயுள் தண்டனை கைதியான டில்லி மாநில முன்னாள் உதவி போலீஸ் கமிஷனர் ரத்தி அடைக்கப்பட்டுள்ளார். இவர், டில்லியில் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி இரண்டு வர்த்தகர்களைக் கொன்ற வழக்கில் கைதாகி, கீழ்கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்காக ஜெகன்மோகன் இன்று உண்ணாவிரதம்: அடுத்த அதிரடி

 ஆந்திராவில் மாணவர்களுக்கான கல்விஉதவித்தொகை நிதி திட்டத்தில் ஆந்திர அரசு உரிய நிதி ஓதுக்க கோரிக்கை விடுத்து ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் ஒரு வார காலம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஆந்திர மாநில முன்னாள் மு‌‌தல்வர் ராஜசேகரரெட்டியின் மகனும், மாஜி காங்கிரஸ் எம்.பியுமான ஜெகன்ம‌ோகன்ரெட்டி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் மாணவர்களுக்குகல்வி உதவித்‌தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உரிய நிதி ஒதுக்க கோரி இன்று ஐதராபாத்தில் உள்ள இந்திரா பூங்காவில் ஒரு வாரம் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஜெகனுடன் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்

Thursday, February 17, 2011

இன்று உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா துவக்கம்


பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட்டின் துவக்கவிழா இன்று தாகாவில் நடக்கிறது. இரண்டே கால் மணி நேரம் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைய உள்ளது.இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரை நடத்துகின்றன. போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் துவங்குகின்றன. இதன் துவக்கவிழா இன்று வங்கதேசத்தின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பின் நடக்கும் "மெகா' விளையாட்டு தொடர் என்பதால், உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தீர்மானித்துள்ளது. 135 நிமிடங்கள் நடக்கும் துவக்கவிழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த விழாவில் பிரபல பாடகர் பிரயான் ஆடம்ஸ், இந்திய பாடகர் சோனு நிகாம் போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.
அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு, எட்டு முன்னணி வங்கதேச பாடகர்கள் பங்கேற்கும் 50 நிமிட நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் ருனா லைலா, சபீனா யாஷ்மின், கிராமிய பாடகர் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஷங்கர், ஈசான், லாய் என்ற மூன்று இந்திய இசையமைப்பாளர்கள் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரின் "தீம்' பாடலை, இந்தி, இலங்கை, வங்கதேச மொழிகளில் அறிமுகம் செய்கின்றனர். இதற்குப்பின் 14 நாடுகள் பங்கேற்கும் 42 நாட்கள் நடக்கும் கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, முறைப்படி அறிவித்து துவக்கி வைக்கிறார். அடுத்து வங்கதேச நிதியமைச்சர் முகித், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசாத் அலி சர்கார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார், வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.அடுத்து அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில், 14 அணியின் கேப்டன்களும், மைதானத்துக்குள் அழைத்து வரப்படுவார்கள். பின் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள, வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் ராட்சத உருவப்படத்தை, பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கிரிக்கெட் திருவிழாவை காரணமாக வங்கதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. துவக்கவிழா நடக்கும் இன்று, பிப். 19 (இந்தியா-வங்கதேசம்) மற்றும் மார்ச் 19 (வங்கதேசம்-தென் ஆப்ரிக்கா) என மூன்று நாட்கள், தாகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக, கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மீனவர்கள் மீது இலங்க‌ை கடற்படை மீண்டும் தாக்குதல்: ஒருவர் படுகாயம்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை ‌கோட்டைபட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்க‌ை கடற்படையினர் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‌கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். அப்போது இலங்க‌ை கடற்‌படையினர் மீனவர்களை தாக்கி படகினை சேதப்படுத்தியுள்ளனர். மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் கரை திரும்பி வந்த ராஜா முகமது என்ற மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 24 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தவகல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, February 16, 2011

சென்னையில் அசத்துமா இந்திய அணி! *பயிற்சியில் இன்று நியூசி.,யுடன் மோதல்


சென்னை: சென்னையில் இன்று நடக்கும் உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் வரும் பிப்., 19ல் துவங்குகிறது. இதற்கு, முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில்(பகலிரவு ஆட்டம்) இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
சச்சின் வருகை:
பெங்களூருவில் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்தியது. இதனால், வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். கடந்த போட்டியில் பங்கேற்காத சச்சின், இன்று களமிறங்க வாய்ப்பு உண்டு. இவருடன் சேவக் இணைந்து அணிக்கு துவக்கம் தரலாம். காம்பிர் மூன்றாவதாக வருவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேவக் மட்டும், அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது பெரும் ஏமாற்றமே. கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது. விராத் கோஹ்லி, யூசுப் பதான் மீண்டும் அசத்த தயாராக உள்ளனர்.
சுழல் ஜாலம்:
 முனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோர், எதிரணியின் விக்கெட் வீழ்ச்சியை துவக்கி வைக்க வேண்டும். சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இது, ஹர்பஜன், அஷ்வின், பியுஸ் சாவ்லா அடங்கிய நமது "சுழல் கூட்டணிக்கு' உற்சாகம் அளிக்கும்.
நியூசி., சோகம்:
நியூசிலாந்தை பொறுத்தவரை சமீபத்தில் பங்கேற்ற 16 ஒருநாள் போட்டிகளில் 14ல் தோல்வியடைந்துள்ளது. உலக கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது. இதில் சதம் அடித்த கப்டில், ரோஸ் டெய்லர், பிராங்ளின் ஆகிய "டாப் ஆர்டர்' வீரர்கள் நல்ல "பார்மில்' உள்ளனர். இவர்கள் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.
வெட்டோரி பலம்:
வேகப்பந்து வீச்சாளர்கள் மில்ஸ், பென்னட், "ஆல்- ரவுண்டர்கள்' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் போன்றவர்கள் இருந்தும், முதல் போட்டியில் அயர்லாந்து அணி அதிக ரன்கள் (279) குவித்தது. கேப்டன் வெட்டோரி மட்டும் சுழலில் சிறப்பாக செயல்பட்டார். இம்முறை ஜான் ரைட் பயிற்சியில், நியூசிலாந்து அணி எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது.
வெற்றி யாருக்கு?
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, வெறுங்கையுடன் தாயகம் திரும்பியது. இதற்கு பழிதீர்க்க, உலக கோப்பை பயிற்சி போட்டியை பயன்படுத்தலாம். அதேநேரம், வெற்றி நடையை தொடர இந்திய அணி காத்திருப்பதால், ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஜாகிர் கானுக்கு ஓய்வு: தோனி
இன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:
கடந்த போட்டியில் "மிடில் ஆர்டர்' சொதப்பியதால் தான் அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இன்று கடைசி பயிற்சி என்பதால், கடுமையாக போராட முயற்சிப்போம். அணியில் <உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் லீக் போட்டிகளின் போது, ஆடுகளத்துக்கு ஏற்ப, விளையாடும் 11 வீரர்கள் முடிவு செய்யப்படுவார்கள். 

ஜாகிர் கானுக்கு இடுப்பு பகுதியில் லேசான வலி தான் உள்ளது. மற்றபடி பெரிய அளவில் எதுவுமில்லை. அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில், ஜாகிர் கானுடன் தான் களமிறங்குவோம். இன்று நாங்கள் எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி, எந்த ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை சார்ந்து இல்லை. அணிக்கு என்ன தேவையோ, அதை அனைத்து வீரர்களும் சேர்ந்து வழங்குவர். மொத்தத்தில் நியூசிலாந்து, மிக திறமையான அணி.
இவ்வாறு தோனி கூறினார்.

மெக்சிகோவிற்கு கோகைன்கடத்தல்: சிக்கியது நீர்மூழ்கி கப்பல்


டிம்பிக்யூ: மெக்சிகோ நாட்டிற்கு கோகைன் போதைப்பொருளை கடத்த முயன்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கொலம்பிய கப்பல் படையினர் கைப்பற்றியுள்ளனர். கொலம்பியாவின் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கப்பலை கப்பல்படையினர் கண்டுபிடித்துள்ளனர். 100 மீட்டர் நீளமும் ,30அடி ஆழம் வரையில் தண்ணீருக்கு அடியில் செல்லும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் எட்டு டன் அளவிற்குசரக்குகளை ஏற்றும் வசதியும் கொண்டுள்ளது.இந்த மாதிரியான கப்பலை போன்று வேறு எங்கும் காணப்பட வில்லைஎன்றும் இதன் சர்வதேச மதிப்பு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டலாராக இருக்க கூடும் என கொலம்பியா ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்தது தாய்லாந்து ஜோடி


பாட்டயா: தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாட்டயாவில் கடந்த 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப் பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீண்ட நேரம் முத்தம் தரும் போட்டி நடைபெற்றது.போட்டியில் திருமணமான தம்பதிகள், காதலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். போட்டியில் ஏழு தம்பதிகள் களத்தில் இருந்தாலும் எக்காசாய்- லக்ஷனாடி ரானாரத் தம்பதி மட்டும் இறுதி வரை களத்தில் நின்று வெற்றி பெற்றனர். இதற்காக இவர்கள் செலவழித்த மொத்த நேரம் சுமார் 46 மணிநேரம் 24 நிமிடம் 9 நொடிகளாகும். போட்டி யானது கடந்த ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு துவங்கியது. செவ்வாய் கிழமை மதியத்திற்கு பின்னர் தான் முடிவு பெற்றது. போட்டியின் பரிசு தொகையான ஆயிரத்து 606 அமெரிக்க டாலர் மற்றும் மூன்றா யிரத்து 213 அமெரிக்க டாலரை பரிசாக வென்றனர்.போட்டியின் போது குடிநீர் , காபி, பால் மற்றும் பழச்சாறு போன்றவை குடிகக அனுமதி வழங்கப்பட்டது. 

ஆனால் அவை முத்தம் தந்து கொண்டே ஸ்டிரா மூலம் குடித்து கொள்ள அனுமதிக்கப்பட் டது.ஒவ்வொரு மூன்று மணிநேர இடைவெளி நேரத்தில் இயற்கை உபா தையை தீர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. போட்டி முடியும் நேரம் வரை உட்கார வும்,தூங்கவும் அனுமதி கிடையாதுஎன்பது வியாகும்.கடந்த 2009-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற முத்தப் போட்டி யின் நேரம் 32 மணிநேரம் ஏழு நிமிடம் 14 வினாடி யாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய உணவு விலை‌‌‌‌‌யேற்றம்: உலக வங்கி கவலை

வாஷிங்டன்: உலகளாவிய உணவு விலை‌ ஏற்றம் அபாய கட்டத்தை நெருங்குவதாகவும், இதான் கரணமாக வே மத்திய கிழக்கு , மத்திய ஆசிய நாடுகளில் அரசியல் குழப்பமும், வன்முறைகளும் அதிகரித்து வருகிறது என உலகவங்கியின் தலைவர் ராபர்ட்ஜியோலிக் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: உலகளாவில் உணவு விலை ஏற்றம் வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளிலும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களை உண்டாக்குகின்றன. எனவே உணவு பாதுகாப்பு என்பது எந்த நாட்டிற்கும் இன்றியமையாத ஒன்றாகும். ‌
எனவே கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், இவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் பின்னணியில்தான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடாடுகளான எகிப்து, துனீசிய, ஏமன் ஆகிய நாடுகளில் வன்முறைகள் தாண்டவமாடின. பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த காரணமாக அமைந்தது. விவசாய பொருட்கள் உற்பத்தியிலல்முன்னிலை வகிக்கும் நாடுகளா ஆஸ்திரேலியா- ரஷ்யா ஆகிய நாடுகளில் ‌மழை, வெள்ளம் , புயல், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டன. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் உலகளாவில் 44 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வளர்ந்து வரும் நாடுகள் அதிகம். எனவே உணடுபாதுகாப்பு குறித்து சர்வதேச சமூகம் புதிய சீர்திருத்தத்தினை ‌கையாள வேண்டும். ஏற்றுமதிக்கு தடை விதிப்பது, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்று தான் மிகச்சிறந்த வழி. இவ்வாறு அவர் கூறினார்.

என்னால்தான் அவன் இவன் தாமதம்! விஷால் ஒப்புதல்!!


ஒரே படத்துக்கு மூன்றாண்டுகள் கூட எடுத்துக் கொள்ளும் டைரக்டர் பாலா, தனது அவன் இவன் படத்தை ஓரே ஆண்டுக்குள் எடுத்து முடித்து விட்டார் என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் அவன் இவன் குழுவில், ஒரு சிலர் விஷால் மனசு வைத்திருந்தால் இன்னும் சீக்கிரமே படத்தை முடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். தாமதத்திற்கு ஏன் விஷால் காரணமானார்? படத்தி்ல் விஷால் ஒன்றரை கண் உடையவராக நடித்துள்ளார். அவர் வரும் குள‌ோஸ்-அப் காட்சிகளை படமாக்கவே நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டனவாம்.

இதுபற்றி விஷால் கூறுகையில், உண்மையிலேயே அவன் இவன் தாமதத்துக்கு காரணம் நான்தான். அவன் இவன் படத்தில் எனக்கு ஒன்றரை கண்! அப்படி நடிக்கறது எவ்வளவு கஷ்டம்னு நடிச்சு பார்த்தால்தான் தெரியும். இப்படி யாராவது வேறு லாங்குவேஜ் படங்களில் நடிச்சிருக்காங்களான்னு தேடினேன். உலக மொழிகள் எதிலேயும் யாருமே அப்படி நடிக்கல. அந்த விதத்தில் எனக்கு பெருமைதான். இந்த மாதிரி நடிக்கும் போது எட்டு ஷாட்டுக்கு மேல் நடிக்க முடியாது. கண்ணு மங்கலாகிடும். அதனால்தான் இந்த படமே லேட்டாச்சு, என்றார்.

மறுக்க முடியாத நிலையில் திமுக "ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்"

 
ராசா கைதோடு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து தி.மு.க.வின் பெயர் விடுபட்டு விடும் என்றுதான் தி.மு.க.வினர் நினைத்திருந்தனர். ஆனால் ராசா கைதுக்குப் பிறகு, க ருணாநிதி குடும்பத்தினர் பெயர் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்க, கதிகலங்கிப் போயுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவை சி.பி.ஐ. கடந்த வாரம் கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதால் காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றும் என தி.மு.க. நம்புகிறது.

அதே நேரத்தில், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தங்களை வந்து சந்திக்கும் என தி.மு.க எதிர்பார்த்தது. திடீர் திருப்பமாக, ‘‘எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகளைக் கலந்து ஆலோசித்து விட்டு தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வருகிறோம்’’ என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்தார்.

காங்கிரஸின் இந்தப் போக்கு தி.மு.க.விற்கு எரிச்சலை உண்டாக்கினாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்காங்கிரஸ்தயவு தேவைப்படுவதால் அமைதியாக நடப்பவைகளை வேடிக்கை பார்ப்பதைத் தவிர தி.மு.க.விற்கு இப்போதைக்கு வேறு வழியில்லை.

காங்கிரஸ் அறிவித்தபடி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் 13-ம் தேதி தொடங்கியது.

காலை 9.30 மணிக்குத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம் காங்கிரஸ் வழக்கப்படி காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. ஐவர் குழு வருவதற்கு முன்னரே சத் தியமூர்த்தி பவன் நிரம்பி வழிந்தது. ஏதோ வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலுக்கு வந்தவர்களைப் போல் பல நிர்வாகிகள், குறிப்பாக சிதம்பரம் ஆதரவாளர்கள் ஃபைல் களுடன் வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றாகச் சென்று, ‘‘எங்களுடைய கருத்துக்களை நாங்கள் சேர்ந்தே சொல்கிறோம். உங்களுக்கும் நேரம் மிச்சமா கும். மற்ற நிர்வாகிகளையும் பார்க்கலாம்’’ என ஆலோசனை கூறினர்.

உடனே தங்கபாலு, சிதம்பரம் மற்றும் ஜி.கே. வாசன் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு, ‘‘மேலிட அறிவுரைப்படி உங்களை தனித்தனியாக சந்திக்கிறோம். எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவழியுங்கள்’’ எனக் கூறினார்.

அதன்படி முதலில் பேசிய எம்.எல்.ஏ. ஞானசேகரன், ‘‘தி.மு.க.வுடன்தான் கூட்டணி என முடிவாகியுள்ள சூழ்நிலையில் கூடுதல் சீட்டுகளையும், ஆட்சியில் பங்கும் பெற வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை’’ என்று கூறிவிட்டு எம்.எல்.ஏ.க்கள் சார்பாக மனுவையும் கொடுத்தார்.

மனுவில், ‘‘சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஒரு சில தொகுதிகள் மாறியுள்ளதால், அதற்குப் பதிலாக அருகில் உள்ள தொகுதியைப் பெற்றுத்தர வேண்டும். 60 வயதைத் தாண்டிய எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியில் பதவியும், இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தங்கள் கருத்தைத் தெரிவிக்க வந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வந்த வேகத்தில் திரும்பினர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேசியபோது, ‘‘உங்களுடைய தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. உங்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் ஜெயிப்பீர்களா? சீட் கொடுத்தால் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எந்தளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது. குறிப்பாக கலர் டி.வி. உங்கள் தொகுதிக்கு முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகள்தான் எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கேட்கப்பட்டது.

‘மீண்டும் சீட் கொடுத்தால் ஜெயிப்பீர்களா?’ என்ற கேள்விக்கு, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.வுடனான கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு குறைவுதான் என்றும், ஆனால் பணம் கொடுத்தாவது ஜெயித்து விடுவேன் எனவும் சிலர் கூறியுள்ளனர்.

அப்படி என்றால் ‘உங்கள் தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவழிப்பீர்கள்?’ என ஐவர் குழு கேட்க, ‘5 கோடி ரூபாய் வரை செலவழிக்கத் தயார்’ என சிலர் கூற, ஐவர் குழுவே அசந்து போனது. அதோடு விடாமல், ‘இந்தப் பணம் போதாது. கட்சியில் இருந்து நீங்கள் காசு கொடுங்கள்’ என்று கூறியதும், அவர்கள் மிரட்சியில் உறைந்து போனார்கள்.



ஸ்பெக்ட்ரம் பிரச்னையை மக்கள் மறந்து விடாத நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி நமக்கு பாதிப்புதான் என சிலர் சொன்னார்கள். அப்போது சிதம்பரம் குறுக்கிட்டு, ‘அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கூட்டணி சேர்ந்தால் நமது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?’ எனக் கேட்க, ‘நமது கதி அதோகதிதான்’ என எம்.எல்.ஏ.க்கள் பதில் அளித்தனர்.

‘கூட்டணியில் பா.ம.க. வந்தால் நமக்கு பலம்’ என வட மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ‘காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது தற்கொலைக்குச் சமம்’ என்பதே எ ல்லா எம்.எல்.ஏ.க்களின் கருத்தாக இருந்தது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஆர்.பி., யசோதா ஆகியோரை தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் சேர்க்காதது வருத்தமளிப்பதாகவும், அவர்களுக்குத் தான் சட்டமன்றத் தொகுதிகள் குறித்து ஆழ்ந்த அறிவு இருக்கிறது எனவும் சில எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டனர்.

தேர்தல் வேலைகளை முன்கூட்டியே ஆரம்பிக்க வசதியாக வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட வேண்டும் என்றும், கடைசி நேரத்தில் வேட்பாளர் பட் டியலை வெளியிட்டால் வெற்றி பாதிக்கும் என நிர்வாகிகள் ஐவர் குழுவிடம் தெரிவித்துள்ளனர்’’ என்று எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

மொத்தமுள்ள 33 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஊட்டி எம்.எல்.ஏ. கோபால், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஹசன்அலி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் ஜே.எம்.ஆரூண் எம்.பி., ‘தேர்தலில் சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் சீட் கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்துவிட்டுச் சென்றார். மாணிக் தாகூர், ‘இளைஞர்களுக்கு அதிக சீட் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

சிதம்பரம் ஆதரவாளரான, விஸ்வநாதன் எம்.பி.,

‘‘எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போது காங்கிரஸுக்கு கவுரவமான தொகுதிகளே கிடைத்துள்ளன. இப்போது நமக்கு வெறும் 67 சீட்கள் கொடுக்க இருப்பதாக கேள்விப்பட்டேன், ராகுல்காந்தி சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, தமிழகத்தில் 15 லட்சம் உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

1967-க்கு முன்பு தமிழகத்தில் காங்கிரஸ் எவ்வளவு எழுச்சியோடு இருந்ததோ, அதே எழுச்சி இன்று உள்ளது. எனவே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 2 தொகுதிகள் விதம் 78 சீட்டுக்களைப் பெற வேண்டும். நமக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. இந்திரா காந்தி இறந்தபோதும், ராஜீவ் காந்தி இறந்தபோதும் நாம் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தது. அதை விட்டுவிட்டோம். மீண்டும் அந்த வாய்ப்பு 96-ல் வந்தது. அதையும் விட்டுவிட்டோம். மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கவுரவமான பங்களிப்பு வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மதிய உணவுக்காக சிதம்பரமும், வாசனும் கிளம்பிச் செல்ல, வாசன் ஆதரவு தொண்டர் ஒருவர், ‘வாசன் வாழ்க’ என கோஷமிட, கோபத்தில் தொண்டரின் கன்னத்தில் பளாரென அறைவிட்டார் வாசன். இதனை எதிர்பார்க்காத தொண்டர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.

அன்று மாலையே, கருணாநிதியைச் சந்தித்த ஐவர் குழு, அரை மணிநேரத்திற்கு மேலாக பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தனர். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் டெல்லி சென்றுவிட்டார். மீதமுள்ள நான்கு பேரும் மற்ற நிர்வாகிகளைச் சந்தித்து தொடர்ந்து கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

அப்போது, ‘‘கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால், தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும். அல்லது ராசா மீதான ஸ்பெக்ட்ரம் வழக்கின் பிடிகளை யாவது தளர்த்த வேண்டும்’’ என்று நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘‘சோனியா காந்தியை யாரோ தவறாக வழி நடத்துகின்றனர். ராகுல் காந்தியின் கனவான ‘எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும்’ என்ற எண்ணம் நாளுக்கு நாள் தொய்வடைந்து வருகிறது. அதற்குக் காரணமே சோனியாவின் தவறான முடிவுகள்தான்’’ என தொண்டர்கள் ஐவர் குழுவிடம் சொல்ல அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்பதே ஐவர் குழு முன் பேசிய பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.
ஆட்சியில் பங்கெல்லாம் தரமுடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவிற்கு காங்கிரஸின் தயவு தி.மு.க.விற்கு தேவையாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறது தி.மு.க.?

எஸ்.ஏ. சந்திரசேகர்:"எந்த சமாதானத்திற்கும் இடமில்லை. திமுக எதிர்ப்பு எதிர்ப்புதான்..!"

கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஜெயலலிதாவைச் சந்திக்க காத்துக் கிடக்கும்போது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மட்டும் போயஸ்கார்டன் கதவுகள் திறந்திருக்கின்றன. தி.மு.க.வை விமர்சிப்பதில் விஜயகாந்துக்கு அடுத்த இடம் எஸ்.ஏ.சி.க்குத்தான். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதுதான் இளைஞர்களிடையே இப்போது ஹாட் டாபிக். ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த எஸ்.ஏ.சி.யைச் சந்தித்தோம்.
‘காவலன்’ படத்தில் ஆளுங்கட்சியினர் செய்த இடையூறுதான் உங்களை தி.மு.க.விற்கு எதிராகப் பேச வைத்துள்ளதா?

“அதுவும் ஒரு காரணம். ‘நாட்டுக்காக உழைக்கிறோம்’ என்று சொல்கிறவர்களே இங்கு மக்களைச் சுரண்டுகிறார்கள். ஊழல்களில் மெகா ஊழலாக போபர்ஸ் ஊழலைச் சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி மகா மெகா ஊழலைச் செய்திருப்பதாக குற்றம்
சாட்டப்பட்டு ராசா கைதாகி இருக்கிறார். தப்பு செய்தவரை விட அதைச் செய்யத் தூண்டுவதுதான் மிகப் பெரிய குற்றம். தவறிழைத்தவர்களைக் காப்பற்ற நினைப்பது சட்டப்படி மோசமான குற்றம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வன்முறை அதிகமாகி விட்டது. ஆந்திராவில் ராயலசீமாவை ரத்த பூமியென சொல்வார்கள். இப்போது தமிழ்நாடும் ரத்தபூமியாகி விட்டது. போலீஸ் அதிகாரியின் பெண்ணைக் காதலித்த மாணவனைக் காணோமாம். காதலிப்பது குற்றமா? ஒரு அரசியல்வாதி வெற்றிபெறுகிற நிலையில், எதிர்த்தரப்பில் பணம் வாங்கிக்கொண்டு விலகி விட்டானாம்.

‘நீ இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டே, நான் இருநூறு கோடி வாங்கிக் கொண்டு விலகி விட்டேன்’ என்கிறான். இந்த நிலைமை மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.’’

இதற்காகத்தான் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினீர்களா?’

“நான் சினிமாவுக்கு வந்ததே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். விஜய் என்கிற சக்தியை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறான். விஜய்யின் பின் னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்தி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன்.

அவர்கள் வெறும் ரசிகர்களாக, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பிளாக்கில் டிக்கெட் வாங்கி விற்கக் கூடாது என்று நினைத்துத்தான் ‘மக்கள் தொண்டனாக’ மாற்றியிருக்கிறேன். இந்த மக்கள் இயக்கத்தின் தலைவர் விஜய். நான், வழி நடத்திச் செல்கிற உந்து சக்திதான். எங்கள் இயக்கம் அரசியல் கலப்பு இல்லாமல் செல்கிற சமூக இயக்கம்.’’

அப்படியானால் ஜெயலலிதாவை இரண்டு தடவை சந்தித்தது ஏன்?

“இப்போது இந்த நாட்டுக்கு நல்ல அரசு தேவை என்கிற உணர்வில் இருக்கிறேன். அதை வெளிப்படுத்துவதற்காகத்தான் நான் அவரைச் சந்தித்தேன். களங்கமற்ற அரசு வேண்டும், லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும், ஊழல் அற்ற அரசு வேண்டும்என்கிறஎனது ஆசைகளை வெளிப்படுத்தத்தான் அவரைச் சந்தித்துப் பேசினேன்.’’

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைப்பதற்காக நீங்கள் ஜெயலலிதாவைச் சந்தித்த தாகவும் பேச்சு நிலவுகிறதே?

“விஜயகாந்த் எனது நல்ல நண்பர். எனக்கு மரியாதை கொடுக்கக் கூடியவர். அவரை சந்தித்த போதும் நான் ஜெயலலிதாவிடம் என்ன சொன்னேனோ அதைத்தான் சொன்னேன். மற்றபடி இடைத் தரகராகவோ, இணைப்புப் பாலமாகவோ நான் வேலை செய்யவில்லை. நல்லது நடக்க வேண்டும் என்கிற ஆசையில் சந்தித்தேன். அவ்வளவுதான்.’’


விஷய்யின் அரசியல் ஆசையில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறதே? அவர் அரசியலில் நேரடியாக இறங்கப் போகிறாரா, அல்லது வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் மட்டும் செய்வாரா?

“விஜய்க்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவருக்கு இப்போது 35 வயதுதான் ஆகிறது. அவர் அரசியலுக்கு வருவதை நூறு சதவிகித மக்களும் ஏற்க வேண்டும். அப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்கும்.

அதற்கான பக்குவம் விஜய்க்கும் நாற்பது வயதில்தான் வரும் என நினைக்கிறேன். இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல முடியும். இப்போது எங்களுடைய பணி, மக்களை ஏமாற்றி சுரண்டுகிறவர்களை அடையாளம் காட்டுவது மட்டும்தான். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை, தூய்மையான ஆட்சியைத் தரக் கூடியவர்களை அடையாளம் காட்டும் பணி எங்களுக்கு இருக்கிறது.’’

தி.மு.க. மத்திய அமைச்சர் ஒருவர் விஷய்யை டில்லிக்கு அழைத்துச் சென்றபோது மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் விளைவாகத்தான் விஷய் பழிவாங்கப்படுகிறார் என்கிற செய்தி உண்மையா?

“அந்த அமைச்சருக்கு விஜய்யை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். டெல்லியில் விஜய்க்கு மனக்கசப்பு ஏற்படும் வகையில் எதுவும் நடக்கவில்லை.

நானும், விஜய்யும் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது, ‘அப்பாதான் அரசியலுக்கு வருவார். நான் இப்போது வரப்போவதில்லை’ என்று ராகுலிடம்விஜய் தெளிவாகவே சொல்லிவிட்டார். நான் மட்டும் அரசியலுக்குச் சென்று என்ன பயன்? எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும். எப்படி மக்களை அணுகுவது என்பதும் தெரியும். ஆனால் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்றால், எங்கள் மக்கள் இயக்கத் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாமல் நான் மட்டும் பதவி வாங்கி என்ன பயன்?’’

வரும் தேர்தலில் நீங்கள் புதுக்கோட்டையில் நிற்கப் போகிறீர்களாமே?

“நான் நிற்பதைவிட எங்கள் தொண்டர்கள் எங்கே நிற்பார்கள் என்பதுதான் கேள்வி. அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் நிற்பது சுயநலம். மக்கள் இயக்கத் தொண் டர்களுக்கு ஏதாவது செய்தால் நான் முழு வீச்சில் தீவிர அரசியலில் இறங்குவேன். இது உறுதி!’’

உங்களுடன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் சமாதானம் பேசுவதாக கூறப்படுவது உண்மையா?

‘‘எம்.ஜி.ஆர். பவர்ஃபுல்லாக இருந்த நேரம். சட்டப் புத்தகத்தை எரித்ததாக கலைஞரைக் கைது செய்து விட்டனர். அப்போது என்னுடைய ‘நீதிக்கு தண்டனை’ படம் வெளிவந்தது. படத்தின் விளம்பரத்தில் கூண்டுக்குள் கலைஞர் இருப்பதைப் போலவும், கூண்டுக்கு வெளியில் ராதிகா நிற்பதுபோலவும் விளம்பரம் வெளியிட்டேன். அப்போது அரசியல் சார்பற்று இருந்த நான் எனக்கு நியாயம் எனப் பட்டதை செய்து காட்டினேன்.

அப்படியிருக்கும்போது என் மகனின் படத்துக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நடப்பது கலைஞர் ஆட்சியா, சன் டி.வி ஆட்சியா என்று நினைக்கிற அளவுக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இதெல்லாம் அந்த முதலாளிக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் கீழே இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ‘காவலன்’ படம் ஓடக் கூடாது என் பதற்காக அவர்களின் தொலைக்காட்சியில் என் மகனின் பழைய திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள். என் மகனின் முகத்தை அழிப்பதற்கு என் மகனின் முகத்தையே பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என்னை வந்து சந்திப்பார்களா?’’ என்றார்.

இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி மீதான வழக்கு


  • இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அவர்களை விசாரிக்க மூன்று பெண் நீதிபதிகளை கொண்ட முழு அமைக்கப்பட்டுள்ளது
  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்
  • இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அந்த நாட்டின் மூன்றாவது இடத்தில் உள்ள பணக்காரர்


இத்தாலிய பிரதமர் சில்வியோ ‌பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டடங்களுக்கு எதிராகப் பெண்கள் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்திய செய்தி அறிந்ததே.

தங்கள் பிரதமரின் சல்லாப சரசங்களால் சர்வதேச அரங்கில் இத்தாலி நாட்டின் கவுரவம் குறைந்து விட்டதாக அப்பெண்கள் வருந்திக் கூறினர். அதிகார பலத்தை அவர் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அப்பெண்கள் முறையிட்டனர்.

பெர்லுஸ்கோனி மீது சிறுவயதுப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீது, சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டது, மற்றும் திருட்டு வழக்கில் கைதான பெண் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க தன் அதிகாரத்தைத் துஷ்பிரயேகம் செய்தது ஆகிய 2 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கு மிலன் மாநகர நீதிமன்றத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது



இத்தாலி நாட்டு பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் காமகளியாட்ட லீலைகளுக்கு எதிராக இத்தாலி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அல் ஜசீரா தொலைகாட்சி இதைப் படம் பிடித்துக் காட்டியது
நேற்று தலைநகர் ரோம், டிரையன்ட், பாரி, வெனிஷ், பலர்மோ உள்ளிட்ட இத்தாலி நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பேரணி நடத்தினர்.

“பெண்மைக்கு மதிப்பு கொடு, “செக்ஸ் லீலை நிறுத்து” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய
அட்டைகளைஏந்தியபடி சென்றனரர்.

நேபிள்ஸ் நகரில் நடந்த பேரணியில் மேயர் ரோசா ருசோ இயர் வோலினோ பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பெர்லுஸ்கோனியின் காமகளியாட்டம் இத்தாலிய பெண்கள் சமுதாயத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பெர்லுஸ் கோனிக்கு எதிராக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் பெண்கள் போராட்டம் நடந்தது. அங்குள்ள இத்தாலி தூதரக அலுவலகம் முன்பு சுமார் 100 பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தனுஷ் ஜோடியாக ஆண்ட்ரியா!

செல்வராகவன் இயக்கும் “இரண்டாம் உலகம்’ என்ற படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்தப் படம் “ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று யாரும் நினைத்து விடவேண்டாம் என்கிறார் செல்வராகவன்.

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் கோழி..!


உலகின் மிக வயது கூடிய கோழியாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச்செய்யும் நோக்கில் சீனாவில் ஒரு கோழி வளர்க்கப்பட்டு வருகின்றது. சீனாவின் Yunnan மாகாணத்தில் வயது முதிர்ந்த தம்பதியினரான Yang Shaofu என்பவரும் அவருடைய மனைவியாலும் இக்கோழி வளர்க்கப்பட்டு வருகின்றது. அவர்களது மருமகளால் கொடுக்கப்பட்ட இக்கோழியை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியும் ஆசையுடன் வளர்த்து வருகின்றனர்.

இது இதுவரை மொத்தம் 5000 முட்டைகளை இட்டுள்ளதாம். எனினும் இதனுடைய ஆரோக்கியத்துக்கு எந்தக் குறையும் இல்லை என்று சொல்கின்றனர் அத்தம்பதியனர். இது பற்றி உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில் இக்கோழியை கொன்று சமையலுக்கு எடுக்கும் படியும் சாதனை சாத்தியப்படாது எனவும் கூறிவருகின்றனர். ஆனால் எனக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. எனது கோழியை சாதனைக்கு கொண்டு சென்ற பின்னர்தான் எதுவும் என்னால் செய்யமுடியும். அது நிச்சயமாக சாதனையை எட்டும் என எனக்கு முழுக்க முழுக்க நம்பிக்கை உண்டு. இதை என்னால் உறிதிப்பட சொல்லமுடியும் என தெரிவித்தார்.

கொடிய வைரஸ் மூலம் நன்மையும் உண்டு- புதிய ஆய்வு!

 
மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸை பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதில் முக்கால் கிணறு தாண்டியிருக்கிறார்கள், விஞ்ஞானிகள். மனிதர்களுக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துபவை `மீசல்ஸ்’ வைரஸ்கள்.  எளிதாகத் தொற்றும் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் ஊடுருவினால் கடுமையான வலியுடன், சிவப்பு சிவப்பான புள்ளிகள் தோன்றும்.
 
ஆனால் தற்போது இந்த வைரஸைத்தான் நன்மை புரிவதாக மாற்றும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த வைரஸை புற்றுநோய்க்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேயோ கிளினிக் ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
 
மீசல்ஸ் வைரஸ்கள், தாங்கள் தாக்கும் செல்லுக்குள் எப்படி நுழைகின்றன, வெளியேறுகின்றன என்பதுதான் தங்கள் ஆய்வுக்கு அடிப்படை என்கின்றனர் இவர்கள். குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை மீசல்ஸ் வைரஸ்களை கொண்டு தாக்கி அழிக்க முயன்று வருகிறார்கள். அதற்காக இந்த வைரஸ்கள் செயல்படும் விதத்தை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறார்கள். இந்த வைரஸ்கள் ஒரு செல்லுக்குள் ஊடுருவுவதில் இரண்டு புரதங்கள் முக்கியமாகச் செயலாற்றுகின்றன என்று ஆரம்பகட்டமாகத் தெரியவந்திருக்கிறது. அவை குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. அந்த ஆய்வு முடியும்போது, புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு முக்கியமான ஆயுதம் பிறந்திருக்கும் என்று உறுதி தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிரபல நடிகரின் வாரிசைக்காதலிக்கும் தமன்னா


ஆந்திராவின் பெரிய நடிகரும், அரசியல்வாதியுமான ஒருவரது வாரிசுக்கு தமன நடிகை காதல் வலை வீசி, அதில் வெற்றியும் கண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு தகவல்.தமிழில் முன்னணி இடத்தில் இருந்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் தமன நடிகை, தமிழ் சினிமா வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக ஆரம்பத்தில் தகவல் கசிந்தது.

அதனை மறுத்து வந்த நிலையில் அம்மணியின் பார்வை ஆந்திரதேசம் பக்கம் வீசியிருக்கிறது. ஆந்திராவின் பிரபல நடிகரும், அரசியல் கட்சி ஆரம்பித்து, அதனை சமீபத்தில் ஆளும் மத்திய கட்சியுடன் இணைத்துக் கொண்டிருக்கும் சீவி நடிகரின் மகன்தான் தமனத்தின் வலையில் விழுந்தது.
 
இப்போது இரண்டு பேரும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆந்திர பத்திரிகைகளின் கிசுகிசு பகுதி.

Tuesday, February 15, 2011

பதில் தராமல் மழுப்புவதாக சி.பி.ஐ.,புகார் : ராஜாவுக்கு மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு மூன்று நாட்கள் காவல் நீட்டிப்பும், தொழிலதிபர் பல்வாவுக்கு நான்கு நாட்கள் காவல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜாவுக்கு நான்காவது முறையாக சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதில் தராமல் மழுப்புவதாக ராஜா குறித்து சி.பி.ஐ., கருத்து தெரிவித்தது. இத்தடவை காவலுக்குப் பின், அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

மா.கம்யூ : பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது

ஊழல் பிரச்சினையில் பா.ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டி உள்ளது.பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்,2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய அளவிலான பா.ஜனதா கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை அந்த கட்சியின் முதல் மந்திரி எடியூரப்பா நில ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சிக்கி உள்ளார்.

காதலர் தினத்திற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?


மகாராஷ்டிர மாநிலத்தில், வருடம்தோறும் காதலர் தினத்தை எதிர்த்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபடும் சிவசேனா இன்றைய தினம் அத்தகைய போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதி காத்தது அந்த மாநில அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் சிவசேனாவின் இளைஞர் பிரிவுக்கு பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா பொறுப்பு ஏற்றுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில்தான் இம்முறை போராட்டம் வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டும், தங்கள் கட்சிக்கு இளைஞர்களின் வாக்குகளை சிதறாமல் தடுக்கும் நோக்கத்திலும்தான் இந்த வருடம் சிவசேனா போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் விளக்கம் : தேமுதிகவுடன் கூட்டணியா?


அதிமுக அணியில் தே.மு.தி.க., சேரும் என்று கூறப்பட்டாலும், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகளை இது வரை இருகட்சிகளும் வெளியிடவில்லை. 

தேமுதிக தரப்பினர் அழகிரி மூலமாக திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும் முயற்சிகள் நடப்பதாக பேசப்படுகிறது.
இந்நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினரான கட்சியின் முக்கிய பிரமுகர்  டில்லியில் முகாமிட்டுள்ளார் என்றும்,

ராகுல்காந்தியின் நேரடி அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

தேமுதிக பிரமுகரை  டில்லி விமான நிலையத்திற்கே வந்து ராகுலுக்கு நெருக்கான பிரதிநிதிகள் அழைத்து
சென்றதாகவும் கூறப்பட்டது.

 இதனால், அ.தி.மு.க. - தி.மு.க., கூட்டணிகளுக்கு போட்டியாக தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா என்ற பரபரப்பு உண்டானது.
 
2010-2011 www.christosebastin.blogspot.com