Thursday, February 17, 2011

மீனவர்கள் மீது இலங்க‌ை கடற்படை மீண்டும் தாக்குதல்: ஒருவர் படுகாயம்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை ‌கோட்டைபட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்க‌ை கடற்படையினர் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‌கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். அப்போது இலங்க‌ை கடற்‌படையினர் மீனவர்களை தாக்கி படகினை சேதப்படுத்தியுள்ளனர். மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் கரை திரும்பி வந்த ராஜா முகமது என்ற மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 24 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தவகல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com