Friday, March 11, 2011

ஜப்பானில் பயங்கர பூகம்பம்-பல பகுதிகளை 'விழுங்கிய' சுனாமி: ஏராளமானோர் பலி!


டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.


சுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.

சுனாமி தாக்கியது : ஜப்பானில் பெரும் நாசம் ; பயங்கர நிலநடுக்கம் :பல வீடுகள‌ை கடல் விழுங்கியது


டோக்கியோ : ஜப்பானில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவை (250 கி.மீட்டர் தொலைவில் ) ஒட்டிய பகுதிகளில் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


இன்று ஜப்பானின் வட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 8. 8 ரிக்டர் அளவாக பதிவாகியிருக்கிறது.

Sunday, March 6, 2011

மதிமுக கேட்பது 36.. கிடைக்கப் போவது 17!

சென்னை: அதிமுக கூட்டணியில் விஜய்காந்த் நுழைந்து 41 தொகுதிகளைப் பெற்றுவிட்ட நிலையில் மதிமுகவுக்கு 17 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணியி்ல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 35 இடங்களில் வைகோவின் மதிமுக போட்டியி்ட்டது. அந்தக் கூட்டணி அமைவதற்கு முதல் நாள் வரை திமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. மதிமுகவுக்கு 27 இடங்கள் கொடுப்பதாக திமுக கூற, அதை ஏற்க மறுத்து திடீரென அதிமுக கூட்டணிக்கு மாறினார் வைகோ.

வருண் காந்தி திருமணம்: ராகுல் பங்கேற்பு!

வாரணாசி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் சஞ்சய் காந்தி - மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்திக்கு நாளை திருமணம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி எம்பி பங்கேற்கிறார்.

மணமகளின் பெயர் யாமினி. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பேஷன் டிசைனர் இவர்.

மத்திய அரசிலிருந்து விலகல்! - திமுக அதிரடி


சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

தாமஸ் விவகாரத்தில் பிரதமரை குறை கூறும் வேகம் தணிகிறது: எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா புதிய விளக்கம்

புதுடில்லி : மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக தாமசை நியமித்ததற்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் வேகம் தணிகிறது. தாமஸ் நியமனம் தொடர்பாக, பிரதமரை மேலும் கேள்விகள் கேட்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொண்டு, இதர விஷயங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14மில்லியன் பவுண்டு செலவில் திருமணம்

புதுடில்லி :இந்தியாவின் மொத்த உணவு தானிய விரயத்தால் ஏற்படும் பற்றாக்குறையில் 15 சதவீதத்தை ஈடுசெய்யும் செலவில் ஒரு இந்திய திருமணம் நடத்தப்பட்டுளளது உலகளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங். எம்.பி. கன்வர் மகன் லலித் தன்வர் மற்றும் டில்லியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகளான யோகிதாவிற்கும், ராஜஸ்தான் பேலஸ்சில் 14மில்லியன் பவுண்டு செலவில் நடந்த இந்த திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்ததாக சொல்லப்படுகிறது. திருமண பரிசாக 429 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு, சில்வர் பிஸ்கட், சபாரி ஆடைகள் மற்றும் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய 100 டிஷ்கள் மற்றும் 12 டிஜிட்டல் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டன. மணமகன்

விழுப்புரத்தில்ரூ.1.25 கோடியில் மின் மயானம் திறப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் இயற்கை அழுகுடன் அமைக்கப்பட்ட முக்தி எரிவாயு தகன மேடை (மின் மயானம்) இன்று திறக்கப்படுகிறது. விழுப்புரம் கே.கே.ரோடில், நகராட்சி மற்றும் ரோட்டரி சார்பில் மக்கள் பங்களிப்புடன் 2.25 ஏக்கர் பரப்பளவில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி 65 லட்சமும், ரோட்டரி 30 லட்சமும் ரூபாயும்,
 
2010-2011 www.christosebastin.blogspot.com