Sunday, March 6, 2011

14மில்லியன் பவுண்டு செலவில் திருமணம்

புதுடில்லி :இந்தியாவின் மொத்த உணவு தானிய விரயத்தால் ஏற்படும் பற்றாக்குறையில் 15 சதவீதத்தை ஈடுசெய்யும் செலவில் ஒரு இந்திய திருமணம் நடத்தப்பட்டுளளது உலகளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங். எம்.பி. கன்வர் மகன் லலித் தன்வர் மற்றும் டில்லியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகளான யோகிதாவிற்கும், ராஜஸ்தான் பேலஸ்சில் 14மில்லியன் பவுண்டு செலவில் நடந்த இந்த திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்ததாக சொல்லப்படுகிறது. திருமண பரிசாக 429 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு, சில்வர் பிஸ்கட், சபாரி ஆடைகள் மற்றும் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய 100 டிஷ்கள் மற்றும் 12 டிஜிட்டல் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டன. மணமகன்
அலங்காரம் செய்தவருக்கு ஐயாயிரத்து ஐந்நூறு டாலர் பணம் தரப்பட்டது. ஒருவார காலம் நடந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் முக்கிய தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட 18 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் உணவு தயாரித்தனர். மொத்த திருமண செலவு 55 மில்லியன் டாலர்களை தாண்டும் எனவும், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என கணக்கீட முடியவில்லை என மணமகனின் மேலாளர் தெரிவித்துள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் இன்று கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், இந்தியா ஏழைநாடு என்ற முறையில், இங்கிலாந்தில் இருந்து தரப்படும் 280 மில்லியன் பவுண்டு வழங்கி வரும் வேலையில், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக 14 மில்லியன் இங்கிலாந்து பவுண்டு செலவழிக்கப்பட்டது உலகளவில் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுபோன்று செல்வ செழிப்போடு திருமணங்கள் நடைபெறும் இந்தியாவிற்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் நிதிஉதவி தேவைதானா என அந்தாட்டு எம்.பி.க்கள் கூறுவதாக பத்திரிகைகள் கருத்து தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மொத்த உணவு தானிய விரயத்தால் ஏற்படும் பற்றாக்குறையில் 15 சதவீதத்தை, இந்த திருமண செலவில் இருந்து ஈடுகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com