Saturday, January 22, 2011

உயிரே.. உயிரே ..

உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும் போதும்
எனை போக விடு

கண்மணி.. எனை போக விடு
ஏ கண்மணி.. கண்மணி..

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே......

இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

உயிரே.. உயிரே ..

உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்
காதல் உண்டானதே
எனை போக விடு
அஹ கண்மணி

விழிகள் என்கின்ற வாசல் வழியாக
காதல் உட்சென்றதே
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு
ஒட்டி வைப்பதா
எனது பொருள் அல்ல நீதான் என்று
எட்டி வைப்பதா
விடைகள் இல்லா வினாக்கள் தானடி

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே

இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே............................................




No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com