நடிகை பூர்ணா பார்க்க அசின் மாதிரி இருக்கிறார் என்றெல்லாம் பாராட்டுகள் குவிகிறது. ஆனால் அசின் படத்தின் கலெக்ஷனில் நு£ற்றில் ஒரு பங்கையோ, அசினின் சம்பளத்தில் நு£ற்றில் ஒரு ரூபாயையோ கூட இன்னும் தொட முடியவில்லை பூர்ணாவால். எல்லாம் விதி என்று நொந்து கொள்கிற பெண்ணும் இல்லை அவர். இப்பவும் வந்த புதிதில் நாம் பார்த்த அதே பிரஷ்னஸ் இருக்கிறது அவரிடம்.
இத்தனைக்கும் இவர் நடித்து வெளிவந்த படங்கள் ஓடவும் இல்லை. நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் வெளிவரவும் இல்லை. வித்தகன், நரன் என்று இரண்டு படங்களுக்கு இந்த கதி. இதில் வித்தகனாவது படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நரன் இன்னும் துவங்கப்படவே இல்லை. தியேட்டருக்கு வருகிற சூழ்நிலையில் இருப்பது ஆடு புலி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே.
இவ்வளவு எரிச்சலிலும், அசின் பற்றி கேட்டால் அழகாக விளக்கம் சொல்கிறார் பூர்ணா. நானும் அசினும் நேர்ல மீட் பண்ணதா எழுதறாங்க. எங்க ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் கேரளாதான்னாலும் நானும் அவங்களும் இது வரைக்கும் மீட் பண்ணியதில்லை என்பதுதான் உண்மை. இதை மறக்காம எழுதுங்க. மற்றவங்களாவது புரிஞ்சுப்பாங்க இல்லையா என்றார்.
No comments:
Post a Comment