Monday, February 21, 2011

வங்கி மேலாளர் மாயம்: மனைவி போலீசில் புகார்

நாமக்கல்: பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் மாயமானது குறித்து அவரது மனைவி, நாமக்கல் போலீசில் புகார் செய்துள்ளார். நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (53). அவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 17ம் தேதி வங்கிக்கு சென்ற தங்கராஜ் மாலை வீடு திரும்பியுள்ளார்.அன்று இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனலட்சுமி நாமக்கல் போலீசில், தனலட்சுமி புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான வங்கி மேலாளர் தங்கராஜை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com