Thursday, April 21, 2011

தகவல் பெறும் உரிமை: வேறு சிறந்த வழியிருக்கிறதா?

எந்த முடிவுகளை மேற்கொள்ளவும் முக்கியத் துணையாக நிற்பவை நம்பகமான தகவல்கள்தான். அரசாங்கமாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி பெறுகிற சரியான தகவல்களின் அடிப்படையிலேயே எந்த முடிவையும் எடுக்க முடியும்.


இந்திய அரசைப் பொறுத்தவரை, தங்களிடமுள்ள தகவல்கள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது!.

அரசு எடுக்கும் முடிவுகளில் பொதுமக்களின் பங்களிப்பே இல்லாமல் போனதன் பின்னணி இதுதான்.

2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசிடமிருந்து தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு ஓரளவு துணை புரிகிறது. ஆனால் தகவல்களைப் பெற இதுதான் சிறந்த வழியா? இதை விட சிறந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட வேறு வழிமுறை ஏதேனும் உள்ளதா?.

இது தொடர்பான உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். சிறந்த கருத்து தெரிவிப்போர் தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவர்.

No comments:

Post a Comment

 
2010-2011 www.christosebastin.blogspot.com