இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒசாமா பின் லேடன் இஸ்லாமாபாத்தில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாத்தில் வைத்து அமெரி்ககப் படைகளால் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் லேடனின் இளைய மனைவியும், ஒரு மகனும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment